கல்யாண கனவு கண்டால் மரணம் வருமோ..?
மயிலை கபாலீஸ்வரன் காராகிரகத்தில் ஏகாந்தமாகக் கொலுவீற்றிருக்க, அவன் கடாட்சம் வேண்டி நம்பிக்கை சுமந்த மனதுடன் கரம்கூப்பி வலம் வந்து கொண்டிருந்தனர், சிவபக்தர்கள். கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தூண் ஒன்றில் முதுகைச் சாய்த்து கால்களை கால்நீட்டியபடி அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்தர்களில்தான் எத்தனையெத்தனை…