- கேள்வி : வாழ்க்கை வெறுத்துவிட்டது, நான் என்ன செய்யலாம்?எஸ்.கோவிந்தன், இராஜபாளையம்.
ஞானகுரு :
பெற்றெடுத்தவர்களை பெருமைபடச் செய்துவிட்டாயா, நீர்வீழ்ச்சிகளையும் ஆறுகளையும் ரசித்திருக்கிறாயா, மலையுச்சியில் தவழ்ந்திருக்கிறாயா, வெற்றியைத் தொட்டிருக்கிறாயா, தினமும் நூறு முறையாவது சிரித்திருக்கிறாயா, அடுத்தகணம் நிகழ இருக்கும் திருப்பத்துக்காக தவித்திருக்கிறாயா, கடவுளைத் தேடி அலைந்திருக்கிறாயா? இவற்றை எல்லாம் அனுபவித்து முடித்தவனுக்குத்தான் வாழ்க்கை வெறுத்துப்போகும்.