- நான் புதிதாக ஒரு தொழில் தொடங்க இருக்கிறேன். எந்தக் கடவுள் படத்தை மாட்டினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்? சி.மாரிராஜ், தேன்கனிக்கோட்டை
ஞானகுரு :
எந்தக் கடவுள் படமும் உதவி செய்யாது. திருவள்ளுவரின் ‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற குறளை எழுதி வைத்து, தினமும் சொல்லிப்பழகுவதுடன், செயல்படுத்தவும் செய். அத்தனை கடவுள்களும் வெற்றியைக் கொண்டுவந்து தருவார்கள்.