- அறிவுரை கூறுபவர்கள் அதன்படியே நடப்பதுண்டா? ஜெ.விக்ரம், அழகாபுரி.
ஞானகுரு :
நோய்க்கு மருந்து கொடுக்கிறார் மருத்துவர். அதனை ஏற்பதும் மறுப்பதும் உன் உரிமை. உனக்கான மருந்தை மருத்துவரும் சாப்பிட்டாரா என்று கேட்பது மூடத்தனம். தன்னை செதுக்கிக்கொள்ள நினைப்பவன் அறிவுரையை மட்டுமே பார்ப்பான், கூறுபவரை அல்ல.