- கேள்வி : ஜனத்தொகை குறைந்தால் நாட்டுக்கு நல்லதா… ஊழல் குறைந்தால் நாட்டுக்கு நல்லதா? டி.செந்தில்குமரன், தபால் தந்தி தெரு, விழுப்புரம்.
ஞானகுரு :
ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதியே. தனக்கு வேண்டிய காரியம் சாதித்துக்கொள்வதற்காகவே லஞ்சத்தையும் ஊழலையும் அனுமதிக்கிறான். மிகக் கொடூரமான தண்டனை கொடுக்கப்படும் நாடுகளிலும் ஊழலும் லஞ்சமும் இருக்கவே செய்கிறது. அதனால் ஜனத்தொகை குறையட்டும் என வேண்டிக்கொள், ஊழல் செய்பவர்கள் எண்ணிக்கை தானாகவே குறைந்துவிடும்.