1. கேள்வி :  மழை நீர் சேமிப்பு போன்று பூமியின் நீர்மட்டம் உயர யோசனை சொல்லுங்கள்? கே.ராஜாத்தி, யமுனை தெரு.

ஞானகுரு :

ஒருவன் மலையில் இருந்து கீழே விழும் நேரத்தில் ஒரு மரத்தின் வேரை பிடித்துக்கொண்டான். கையை எடுத்தால் மரணம் நிச்சயம். கடவுளைக் கூப்பிட்டான். கூப்பிட்ட குரலுக்கு கடவுளும் வந்தார். காப்பாற்றுமாறு கெஞ்சினான். கையை எடுத்துவிடு காப்பாற்றுகிறேன் என்றார் கடவுள். அவன் நம்பிக்கையுடன் கையை எடுப்பதற்குத் தயங்கவே காணாமல் போனார் கடவுள்.

அதனால், உன் நம்பிக்கையை இயற்கையின் மீது வை. அணைகளை நம்பியும் மழைநீர் சேமிப்பையும் நம்பி ஏமாறாதே. மழை பெய்வதற்கும் பொய்ப்பதற்கும் ஏதேனும் காரணம் இருக்கவே செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *