- எனக்கு ஐம்பது வயதாகிறது. சிற்றின்பத்தை தள்ளிவைத்து பேரின்பத்தை அடைய நினைக்கிறேன். இது சரியான வழிதானே? பன்னீர்செல்வம், பாவாலி.
ஞானகுரு :
குற்ற உணர்வு இல்லாமல் காமத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் கோயில்களில்கூட காமம் ததும்பும் சிலைகளை அமைத்திருக்கிறார்கள். காமத்தை கைவிட்டால்தான் கடவுளை அடையமுடியும் என்று யாராவது உன்னிடம் சொன்னார்களா? சிற்றின்பத்தை அடக்கிவைப்பதால் கடவுளைக் காண முடியுமோ இல்லையோ, உன் மனைவியை தொலைத்துவிடுவாய்