கனவு ஏன் வருகிறது? கனவில் வருபவை நிஜமாக நடக்க வாய்ப்பு உண்டா?
- எஸ்.செய்யது அலி பாத்திமா, ராம்நாட்.
ஞானகுரு :
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என்று எந்த மதப்பாகுபாடும் இல்லாமல் உலகில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் கனவுகள் வருகின்றன. இதிலிருந்து எந்தக் கடவுளாலும் கனவினை தடுத்து நிறுத்தமுடியாது என்பதைப் புரிந்திருப்பாய். அனுதினமும் சேகரமாகும் குப்பைகளை மூளை வெளியே தூக்கி எறிவதுதான் கனவு. இந்தக் குப்பைகள் எல்லாம் உனக்குத் தெரிந்தும் தெரியாமலும் சேர்ந்தவைதான். அந்தக் குப்பைகளைக் கிளறி ஏதாவது கிடைக்குமா என்று தேடாதே… தொலைந்துபோவாய்.