கேள்வி : ஆதி சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், ஷீரடி சாய்பாபா, மகா பெரியவர் என்று எத்தனையோ குருமார்கள் சர்ச்சை இன்றி நடமாடிய நாடு இது. இன்றையஆன்மிகவாதிகள் மீது மட்டும் ஏன் இத்தனை குற்றச்சாட்டுகள்?

–  காவேரி மாணிக்கம், காஞ்சிபுரம்

ஞானகுரு :

இறந்துபோன ஒருவரைப் பற்றித் தவறாகப் பேசக்கூடாது என்பது நம் பண்பாட்டின் கேவலமான மரபு. அதனால்தான் செத்துப் போன சாமியார்கள் புனிதர்களாகவும் இப்போது இருப்பவர்கள் அயோக்கியர்களாகவும் தெரிகிறார்கள். தன்னை கடவுள் என்று சொல்பவனும், தன்னை கடவுள் போல் பூஜிக்க அனுமதிப்பவனும் நிச்சயம் புனிதமானவன் இல்லை. ஐம்பது வருடங்கள் கழித்து இன்றைய சாமியார்கள் எல்லாம் புனிதர்களாக போற்றப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *