கேள்வி : புத்தர் மனிதனா, கடவுளா..?
– சி.மதிவாணன், செங்கல்பட்டு.
ஞானகுரு :
‘நான் தேவனோ அவதாரமோ இல்லை. புத்த நிலையை அடைந்த ஒரு மனிதனே நான். புவியில் பிறந்த மனிதராகிய நீங்கள் அனைவருமே புத்த நிலையை அடைய முடியும்’ என்று வெளிப்படையாகச் சொன்னவர்தான் கௌதம புத்தர். பசியும், தூக்கமும், வலியும், மரணமும் கொண்ட மனிதர்கள் யாருமே கடவுள் ஆகமுடியாது.