கேள்வி : பள்ளிகள் வியாபாரக்கூடமாக மாறிவருகிறதே..?
- டி.முனியம்மாள், கூமாபட்டி
ஞானகுரு : நிறைய பணம் கட்டி படிக்கவைத்தால் எதிர்காலத்தில் நிறையநிறைய சம்பாதிப்பான் என்று கணக்குப்போட்டு படிக்கவைப்பது நீதானே. வியாபார புத்தியுடன் நீ யோசிக்கும்போது, பள்ளிக்கூடம் நடத்துபவனும் வியாபாரம்தானே செய்வான். மாணவர்களை சிந்திக்கத் தூண்டும் குருவும் கல்விசாலையும் இன்னமும் திறந்துதான் கிடக்கின்றன. தேடிக் கண்டுபிடிப்பதுதான் பெற்றோரின் கடமை.